×

திருவாடானை அருகே வடமாடு மஞ்சு விரட்டு

திருவாடானை, ஏப்.30: திருவாடானை அருகே இளஞ்சியமங்கலம் கிராமத்தில் சித்திரை தமிழ் வருட பிறப்பை முன்னிட்டு, உயர்ந்த உள்ளங்கள் இளைஞர் நற்பணி மன்றத்தின் சார்பாக இரண்டாம் ஆண்டு வடமாடு மஞ்சுவிரட்டு திருவிழா நடைபெற்றது. இந்த வடமாடு மஞ்சுவிரட்டு விழாவில் மொத்தம் 12 காளைகள் கலந்து கொண்டது. ஒன்பது வீரர்கள் அடங்கிய 12 குழுக்களாக கலந்து கொண்டனர். ஒவ்வொரு மாடு பிடி வீரர்களுக்கும் மாட்டிற்கும் 20 நிமிடங்கள் வழங்கப்பட்டு மஞ்சுவிரட்டு நடைபெற்றது.

இதில் வெற்றி பெற்ற காளைக்கும், காளைகளை அடக்கிய வீரர்களுக்கும் ரொக்க பணம், கோப்பைகள் பரிசாக வழங்கப்பட்டது. மஞ்சுவிரட்டுவை கண்டு களிக்க சுற்றுவட்டாரத்தில் இருந்து ஆயிரக்கணக்கானோர் வந்திருந்தனர். காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். திருவாடானை தீயணைப்பு நிலைய வீரர்கள் தயார் நிலையில் இருந்ததனர். அவசர உதவிக்கு 108 ஆம்புலன்ஸ் உள்ளிட்டவைகள் மருத்துவ உதவியும் செய்யப்பட்டிருந்தது.

The post திருவாடானை அருகே வடமாடு மஞ்சு விரட்டு appeared first on Dinakaran.

Tags : Vadamadu Manchu Vrattu ,Thiruvadanai ,Vadamadu Manchuviratu Festival ,Ushreka Unalang ,Yuvadhan ,Napani Mandra ,Ushresh Unalang ,Yuvad Napani Mandra ,Ilanjiamangalam ,Chitrai ,Vadamadu Manchu Vrattu festival ,Vadamadu Manju Vrattu ,Thiruvadan ,
× RELATED திருவாடானை அருகே தீப்பிடித்து எரிந்த வைக்கோல்